Sunday, 7 September 2014

தமிழக அரசுப் பதிவேட்டில் பெயர் மாற்றம் செய்துகொள்வதற்கான வழிமுறைகள்



பெயர் மாற்றம் செய்வதற்கான தகுதிகள்:

தமிழ்நாட்டில் வசிக்கும் எவரும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்
60
வயதுக்கு மேல் உள்ளவரானால் பதிவுபெற்ற மருத்துவரிடமிருந்து Life Certificate அசலாகப் பெற்று இணைக்க வேண்டும்.

தேவையான ஆவணங்கள்:

பிறப்பு / கல்விச் சான்றிதழ் நகல் இணைக்க வேண்டும். பிறப்பு / கல்விச் சான்றிதழ் இல்லாதவர்கள் வயதை நிரூபிக்க அரசு மருத்துவரிடம் உரிய சான்றிதழ் பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.

சமீபத்தில் எடுக்கப்பட்ட விண்ணப்பதாரரின் புகைப்படத்தை, அதற்கென அளிக்கப்பட்டுள்ள இடத்தில் ஒட்டி, தமிழக / மத்திய அரசின் அ மற்றும் ஆ பிரிவு அலுவலர்கள் /சான்று உறுதி அலுவலரிடமிருந்து சான்றொப்பம் பெறப்பட வேண்டும்.

பிற மாநிலத்தில் பிறந்து, தமிழ்நாட்டில் வசிப்பவர்கள் -
தமிழ்நாட்டில் வசிப்பதற்கு ஆதாரமாக உணவுப்
பங்கீட்டு அட்டை/கடவுச் சீட்டு/வாக்காளர் அடையாள அட்டை/
வட்டாட்சியரிடமிருந்து பெறப்பட்ட இருப்பிடச் சான்றிதழ்
இதில் ஏதேனும் ஒன்றின் சான்றிட்ட நகல் இணைக்க வேண்டும்.

தத்து எடுத்துக்கொண்டு, அதனால் பெயர் மாற்றம் செய்வோர்
தத்துப்பத்திரத்தின் சான்றிட்ட நகலை இணைக்க வேண்டும்.
மண முறிவு செய்து, அதனால் பெயர் மாற்றம் செய்வோர்
நீதிமன்றத் தீர்ப்பை சான்றிட்ட நகலாக இணைக்க வேண்டும்.

கட்டணம்:


பொதுவாக பெயர் மாற்றக் கட்டணம் 9-2-2004 முதல் ரூ.415
மட்டும்.
தமிழில் பெயர் மாற்றக் கட்டணம் ரூ.50 மற்றும் அரசிதழ் +அஞ்சல் கட்டணம் ரூ.65.

செலுத்தும் முறை:

அலுவலகத்திற்கு நேரில் சென்று காலை 10.00 மணி முதல்
1.00
மணி வரை, பிற்பகல் 2.00 மணி முதல் 3.00
மணி வரை பணமாகச் செலுத்தலாம்.

அஞ்சல் மூலம் செலுத்த:

உதவி இயக்குநர் (வெளியீடுகள்),
எழுதுபொருள் அச்சுத் துறை ஆணையரகம்,
சென்னை-600 002
என்ற பெயரில் தேசியமயமாக்கப்பட்ட
வங்கி வரைவோலை மூலம் பண விடைத்தாள்/ அஞ்சல் ஆணைகள் ஏற்றுக்கொள்ளப்படாது.

விண்ணப்பிக்கும் முன் கவனிக்க வேண்டியவை:

பெயர் மாற்றத்திற்கான காரணம் தெரிவிக்க வேண்டும்.
பழைய பெயர் ( ம ) புதிய பெயரில், என்கிற (Alias)
என்று பிரசுரிக்க இயலாது.

பிரசுரம் செய்யப்பட்ட அரசிதழில் அச்சுப்பிழைகள்
ஏதுமிருப்பின் அவற்றை ஆறு மாதங்களுக்குள்
சரிசெய்து கொள்ள வேண்டும். அதற்குப்பின் பிழைகளை திருத்தம்
செய்யக்கோரும் எவ்விதக் கோரிக்கையும் கண்டிப்பாக ஏற்கப்பட
மாட்டாது.

பெயர் மாற்ற அறிவிக்கை தமிழ்நாட்டைச்
சேர்ந்தவர்களுக்கு மட்டுமே. அதற்கான உறுதிமொழியை உரிய
இடத்தில் அளிக்க வேண்டும்.

விண்ணப்பத்துடன் இணைக்கும் அனைத்து நகல்களிலும்
கெசட்டட் அலுவலரிடம் கையெழுத்துப் பெற்று இணைக்க
வேண்டும்.

நிபந்தனைகள்:

விண்ணப்பதாரர் தவிர வேறு எவரும் எவ்வித தொடர்பும்
கொள்ளக் கூடாது.பணம் செலுத்துவது தொடர்பாக
விண்ணப்பதாரருக்கு நினைவூட்டு ஏதும் அனுப்பப்பட
மாட்டாது.

இத்துறையால் வழங்கப்பட்ட விண்ணப்பப் படிவம்
மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்.
வெளியில் அச்சிட்ட அல்லது ஒளிப்பட நகல் படிவம்
ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
எப்படி பெறுவது?
அரசிதழை நேரில் பெற விருப்பம் தெரிவிப்பவர்கள், அரசிதழ்
பிரசுரிக்கப்பட்ட 5 நாட்களுக்குள் நேரில்
வந்து அரசிதழை பெற்றுக்கொள்ள வேண்டும். தவறினால்
அரசிதழ் தபால் மூலம் உரிய நபருக்கு அனுப்பப்படும்.
தபால் மூலம் அனுப்பப்படும் அரசிதழ்கள்,
தபால்துறை மூலம் திருப்பப்படும் பட்சத்தில், அரசிதழ்கள்,
உரிய நபர்களுக்கு மீண்டும் தபால் மூலம்
அனுப்பப்படமாட்டாது. இது போன்ற நிகழ்வுகளில், உரிய
நபர்கள் 6 மாதங்களுக்குள் நேரில் வந்து, தபால்துறை மூலம்
திருப்பப்பட்ட, அவர்களுக்கான அரசிதழ்களைப் பெற்றுச்
செல்லலாம்.

விண்ணப்பத்தில் கையெழுத்திடும்முன்:

சுவீகாரம் தொடர்பாக பெயர் மாற்றம் செய்யும் பட்சத்தில்,
சுவீகாரம் எடுத்துள்ள தந்தை (ம) தாயார் மட்டுமே, பெயர்
மாற்றம் செய்ய விண்ணப்பித்து, படிவத்தில் உரிய
இடத்தில் கையொப்பம் இட வேண்டும்.
விண்ணப்பத்தில் விண்ணப்பதாரர் மட்டுமே கையொப்பம்
இடவேண்டும். விண்ணப்பதாரர் 18
வயது பூர்த்தி அடையாதவராக (Minor) இருந்தால், தந்தை,
தாயார் அல்லது பாதுகாப்பாளர் மட்டுமே கையொப்பம் இட
வேண்டும். பாதுகாப்பாளராக இருப்பின் அவர் பாதுகாப்பாளராக
நியமிக்கப்பட்டதற்கான ஆணை நகல் (Legal Guardianship
Order)
சான்றொப்பம் பெறப்பட்டு இணைக்கப்பட வேண்டும்.
கையொப்பத்தின்கீழ் உறவின் முறையை (Capital Letter-இல்)
தந்தை/தாய்/ பாதுகாப்பாளர் பெயருடன் குறிப்பிட வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு:

உதவி இயக்குநர் (வெ), எழுதுபொருள் அச்சுத்
துறை ஆணையரகம், சென்னை-2-இல் 044-2852 0038, 2854
4412
மற்றும் 2854 4413 என்ற தொலைபேசி எண்ணில்
தொடர்புகொள்ளலாம்

 இத்தளத்திற்குச் சென்று மேலும்
விவரங்கள் தெரிந்துகொள்ளலாம்.

விண்ணப்பப் படிவங்களை தரவிறக்கிக் கொள்ளலாம்.
தத்து எடுக்கும் பிள்ளைகளுக்கான பெயர் மாற்றம் செய்வோர்
கவனத்திற்கு:

சுவீகாரத் தந்தை/தாய் இருப்பின் அவர்கள் சுவீகாரம்
பதிவு செய்யப்பட்ட சுவீகாரப் பத்திர நகலில் சான்றொப்பம்
பெறப்பட வேண்டும், பிறப்புச் சான்றிதழ் மற்றும் குடும்ப
அட்டை நகல் இணைக்கப்பட வேண்டும்.
சுவீகாரம் கொடுக்கப்பட்ட மகன்/மகளின் சுவீகாரத் தந்தை/
தாய் இருவரும் காலம் தவறி இருப்பின்
இதை அரசு வெளியீட்டில் பொது அறிவிக்கையாக மட்டுமே வெளியிட
இயலும். இதற்கான ஆவணங்கள் பதிவு செய்யப்பட்ட
சுவீகாரப் பத்திர நகலில் சான்றொப்பம் பெறப்பட வேண்டும்,
பிறப்புச் சான்றிதழ் நகல், குடும்ப அட்டை நகல்
இணைக்கப்பட வேண்டும்

பிறப்பு – இறப்பு சான்றிதழ் பெறுவதற்கான வழிமுறைகள், திருத்தம் செய்ய, ஆன்லைனில் பெற



ஒரு மனிதன், பிறக்கும் போது,அவன் வாழும் காலம் வரை. அவனதுபிறப்புச்சான்றிதழ் பயன்படும் அதே மனிதன் இறந்த பின்பு, அவனது குடும்பத்தாருக்கு அவனது இறப்புச் சான்றிதழ் பயன்படுகிறது. இதிலிருந்தே பிறப்பு இறப்பு சான்றிதழ்களின் முக்கியத்துவத்தை உணர்வீர்கள்.

குழந்தையை பள்ளியில் சேர்க்கும் போது கட்டாயமாக அக்குழந்தையின் பிறப்புச் சான்றிதழை பள்ளியில் சமர்ப்பித்தே ஆக வேண்டும். அப்ப‍டி சமர்ப்பிக்கும் கல்வி ஆவணங்களில் தவறான பிறந்த தேதியை திருத்த பிறப்பு சான்றிதழ் கொடுத்து விண்ணப்பம் செய்து கல்வி ஆவணங்களில் உள்ள பிறந்த தேதியை திருத்திக் கொள்ளலாம் ஆனால் பிறப்பு சான்றிதழில் பதிவு அலுவலரின் தவறு அல்லது மருத்துவமனையின் தவறு காரணமான பிழையை மட்டும் மனு செய்து ஆவணங்களை காட்டி திருத்திக் கொள்ளலாம்.

பிறப்பு சான்றிதழ் திருத்தம் செய்ய வழி:-

கல்வி சான்றிதழ்களில் ஒரு பிறந்த தேதியும் பிறப்பு சான்றிதழில் ஒரு பிறந்த தேதியும் என்று மாறுபட்ட இரு பிறந்த தேதிகள் பலருக்கு சில காரணங்களால் ஏற்பட்டு விடுகின்றது. பிறந்த தேதியை நிருபணம் செய்ய வேண்டிய தேவை ஏற்படும் போது (எ.கா பாஸ்போர்ட் விண்ணப்பிக்க)இது பெரிய சிக்கலை உருவாக்குக்குகின்றது.

பலர் பள்ளியில் சேர்க்கும் போது உரிய வயதை மாற்றி சொல்லி சேர்த்து விடுகின்றார்கள் அல்லது ஏதோ ஒரு தேதியை சொல்லி சேர்த்து விடுகின்றார்கள். பிறப்பு இது வரையில் பதிவு செய்யப்பட வில்லை என்று பொய் சொல்லி நீதிமன்றத்தில் பிறப்பினை குறுக்கு வழியில் புதியதாக பதிவு செய்து சான்றிதழ் பெறுகின்றார்கள் ஆனால் இவர்களுக்கு இர ண்டு பிறப்பு சான்றிதழ் இருக்கும். இது ஆபத்தானது எதிர்காலத்தில் பல சட்ட சிக்கல்களை உருவாக்கும் உரிமையியல் நீதிமன்றத்தில் மனு செய்து பிறந்த தேதியை சரி செய்வது மட்டுமே சரியான பாதுகாப்பன தீர்வு ஆனால் காலதாமதம் ஏற்படும்

பதிவு செய்ய கால கெடு:-

ஒரு பிறப்பு அல்லது இறப்பினை 30 நாட்களுக்குள் பதிவுசெய்யவேன்டும் ,

தவறினால் ஒராண்டிற்குள் பிறப்பு இறப்புஅலுவலர் காலதாமத்திற்கான காரனத்தினை ஏற்று பதிவு செய்துக் கொள்ளலாம்

ஒராண்டு கடந்த பின்பு பிறப்பு - இறப்பு பதிவாளருக்கு பதிவு செய்ய அதிகாரம் இல்லை

நீதிமன்ற உத்திரவுமூலம் மட்டுமே ஒராண்டு கடந்த பின்பு பிறப்பு - இறப்பு பதிவு செய்ய பதிவு செய்ய முடியும்

பிறப்பு - இறப்பு பதிவாளர்:-

பிறப்பு - இறப்பு பதிவாளர் என்பவர் கிராம ஊராட்சியை பொறுத்த வரை வட்டாட்சியர் ( கிராம நிர்வாக அலுவலர் ஒரு மாதம் வரை பிறப்பு இறப்பினை பதிவுசெய்து சான்று வழங்குவார் பின்னிட்டு வட்டாட்சியர்)

பேரூராட்சி பகுதிக்கு அதன் செயல் அலுவலர்

நகராட்சி பகுதிக்கு ஆணையாளர் (சுகாதர ஆய்வாளர் – ஒரு மாதம் வரை பிறப்பு இறப்பினை பதிவு செய்து சான்று வழங்குவார்)

மாநகராட்சி பகுதிக்கு ஆனையாளர் (சுகாதர ஆய்வாளர் – ஒரு மாதம் வரை பிறப்பு இறப்பினை பதிவுசெய்து சான்று வழங்குவார்)

நீதிமன்றம் மூலமாக உத்திரவு பெற

ஒரு பிறப்பு அல்லது இறப்பினை அது நடந்த ஒராண்டு கடந்த பின்பு பதிவு செய்ய பிறப்பு- இறப்பு பதிவாளருக்கு அதிகாரம் இல்லை ஆனால் நீதிமன்ற உத்திரவு மூலம் மட்டுமே ஒராண்டு கடந்த பின்பு பிறப்பு- இறப்பு பதிவு செய்ய முடியும்

நீதிமன்றத்தில் உத்திரவு பெற சம்மந்தபட்ட உள்ளாட்சி அல்லது சார்பதிவாளர் அல்லது வட்டாட்சியர் அலுவலகத்தில் (எந்த அலுவலகத்தில் ஆவணம் உள்ளதோ) பதிவு இல்லை என்பதற்கான சான்றிதழ் பெற்று நீதிமன்றத்தில் மனு செய்ய வேண்டும்

பிறப்பு சான்றிதழ், இறப்பு சான்றிதழ் இனிமேல் ஆன்லைனில் பெறலாம்:-
அதுவும் ஒரு ரூபாய் செலவு இல்லாமல் பிடிஎஃப்(PDF) காப்பியில் சேமிக்கலாம். உங்களிடம் ஏற்கனவே சான்றிதழ் இருந்தாலும் இந்த ஈ காப்பி டவுன்லோட் செய்து வைத்து கொண்டால் வேண்டும் போது பிரின்ட் அவுட் செய்து கொள்ளலாம். அது போக பரிமாற்றம் செய்ய அப்படியே ஈமெயிலில் பறி மாறிக்கொள்ளலாம்.

இதை நம்மூர் ஆட்களுக்கும் வெளியூர் ஆட்களும் இதனால் பலன் அடை யலாம். அது போக உங்களுக்கு தெரிய வேண்டியது எல்லாம் ஒரே விஷ யம்தான். அது தான் பிறந்த தேதி மட்டும் அல்லது இறந்த தேதி மட்டும் போதும். இது இருந்தால் உடனே அந்நாளில் பிறந்த இறந்த அத்தனை ஆட் களின் பெயரும் ஏ – இசட் வரிசை முறையில் வரும் அதில் உங்களுக்கு வேண்டிய பெயரை கிளிக் செய்து பிரின்ட் அவுட் எடுத்து கொள்ளுங்கள் அல்லது சேவ் செய்து கொள்ளுங்கள்.

அது போக பிறந்த இறந்த சான்றிதழில் ஏதேனும் தவறு இருந்தால் இங்கேயே திருத்தும் வசதி உள்ளது. ஒவ்வொரு சான்றிதழுக்கும் ஒரு தனி எண் உண்டு.

அதனால் சொத்து வாரிசு சான்றிதழ் கூட இதை வைத்து தான் வழங்கப்படும் அதனால் வீட்டில் இருந்தே பெற்று கொள்ளுங்கள்.

பிறப்பு சான்றிதழ் ஆன்லைனில் பெற –

சென்னைவாசிகளுக்கு

http://www.chennaicorporation.gov.in/online-civic-services/birthCertificate.do?do=ShowBasicSearch



பிறப்பு சான்றிதழில் தவறு இருந்தால் திருத்தி கொள்ள -

http://www.chennaicorporation.gov.in/admin/birthCertificateList.do?method=editRecord&mode=enduser&regitrationNumber=COC%2F2011%2F08%2F116%2F000510%2F0



இறப்பு சான்றிதழ் பெற –

http://www.chennaicorporation.gov.in/online-civic-services/deathCertificateBasicSearch.jsp



இறப்பு சான்றிதழை திருத்தி கொள்ள –

http://www.chennaicorporation.gov.in/admin/deathCertificateList.do?method=editRecord&mode=enduser&registrationNumber=COC%2F2007%2F02%2F024%2F001095%2F0



இது சென்னை,மதுரை, கோயம்பத்தூர் , திருச்சி, மாநகராட்சி

மிச்சம் உள்ள ஊருகளுக்கு வருகிறது கூடிய சீக்கிரம்……..



கோயம்புத்தூர் – பிறப்பு

https://www.ccmc.gov.in/ccmc/index.php?option=com_content&view=article&id=81&Itemid=150



கோயம்புத்தூர் மாநகராட்சி – இறப்பு

https://www.ccmc.gov.in/ccmc/index.php?option=com_content&view=article&id=81&Itemid=151



மதுரை மாநகராட்சி –

http://203.101.40.168/newmducorp/birthfront.htm (NO DNS so use the same format)



திருச்சி மாநகராட்சி -

https://www.trichycorporation.gov.in/birth_search.php#menu



திருநெல்வேலி மாநகராட்சி

- http://tirunelvelicorp.tn.gov.in/download.html